ஆதிச்சநல்லூர் மண்ணில் புதைந்த வரலாறுகள் இன்று வரை உலகை வியக்க வைப்பதைபோல ஏராளமான கிராமங்கள் தங்களது பழம்பெருமையை சுமந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாற்றின் அழியாச் சுவடாய் நிற்கிறது இராமநாதபுரம் மாவட்டத்தின் நரிப்பையூர் ஊராட்சி. இந்த ஊருக்கு ‘சம்புமாநகர்’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. “சம்பு” என்பது வடமொழியில் நரியைக் குறிக்கும் சொல்லாகும். மேலும், “நரிப்பையூர்” என்ற பெயருக்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்ற பொருளும் கூறப்படுகிறது.



