December 11, 2023

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஏடிஎம்  கொள்ளை முயற்சி தென்காசி போலீசார் துரித நடவடிக்கை

தென்காசி – மதுரை பிராதன சாலையில் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி நடு பெட்ரோல் பங்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்  கொள்ளை அடிக்க முயற்சி செய்த நபரை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி,

தென்காசி குற்ற பிரிவு பெண் ஆய்வாளர் திருமதி. கவிதா தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர் மாடசாமி , காவலர்கள் சக்திவேல் , சீவ முத்து , அருள்ராஜ் , அலெக்ஸ் , மஜித் ஆகியோர்

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடைப்படையில் விசாரணை செய்து மேற்படி எதிரி கொல்லம் பகுதியை கிருஷ்ணன்பிள்ளை மகன் ராஜேஷ் (வயது 41 ) என்பவரை விரைந்து சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பத்து மணி நேரத்தில் எதிரியை கைது செய்து நடுவர் நீதிபதி வசம் ஆஜர் படுத்தினார் இந்த துரித நடவடிக்கைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவாளியை கைது செய்த காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்

About Author

error: Content is protected !!