December 11, 2023

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி பெற்றமகனை கொலை செய்த பெற்றோர் உட்பட மூவர் கைது

தென்காசி அருகே வல்லத்தில் பெற்றமகனை கொலை செய்த பெற்றோர்கள் உட்பட மூவர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பிஸ்மி நாலாவது தெருவை சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர் .இவரது மகன் அபு என்ற முகம்மது சித்திக் (25) கடந்த ஐந்தாம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இறந்து போன சித்திக்கின் கழுத்தில் காயங்கள் இருந்தது முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்தது இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினார்

இதில் பெற்றோர்களே தனது உறவினர் ஒருவர் உதவியுடன் பெற்ற மகனை கொலை செய்திருப்பது அம்பலமானது.முகமது சித்திக் வேலைக்கு எதுவும் சொல்லாமல் போதைக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இதை பலமுறை பெற்றோர்கள் கண்டித்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
இதனால் வெறுப்படைந்த தந்தை அப்துல்காதா்.(51) தாய், செய்யது அலி பாத்திமா (39) பாத்திமாவின் சகோதரர் மற்றும் திவான்ஒலி(39) ஆகியோர் கடந்த ஐந்தாம் தேதி அவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் சித்திக் தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடி போலீசில் புகார் செய்து விஷயத்தை மூடி மறைக்க முயன்றனர்.

ஆனால் சித்திக்கின் கழுத்தில் இருந்த காயம் முதல் கட்ட பரிசோதனையில் அது கொலைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மகனுடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோரும் அவரது தாய் மாமனும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு மூவரும் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பெற்ற மகனையே பெற்றோர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

About Author

error: Content is protected !!